இந்தியாவை மாற்றிக் காட்டிய பிரதருக்கு எனது வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜி20 மாநாட்டில் பிரதமருக்கு முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பாரத் என குறிப்பிட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, அதை ‘பாரத்’ என மாற்றிவிட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “வர்றவன் போறவன் எல்லாம் தலைக்கு விலை பேசுறாங்க.. எனக்கு DEMAND அதிகமாயிட்டே போகுது… “சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை ஒழிப்பது குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததையா நான் பேசிவிட்டேன்? சனாதனம் பற்றி பேசிய அண்ணா பெயரில் உள்ள கட்சியான அ.தி.மு.க.வின் கருத்தை நான் அறிய விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.