கோடை காலத்தில் தமிழகத்தில் மின் தேவை 3000 மெகா வாட் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து தடை இல்லா மின் சேவை வழங்கப்படும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலத்தில், கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் அளிப்பது குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது, கூட்டதிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி..,
மின் விநியோகம் தமிழ்நாடு முழுவதும் மின் தேவை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது .
2020-21 தமிழ்நாட்டினுடைய மின் நுகர்வு 16,481 மெகா வாட் தற்போது 2023-24 ஏப்ரல் மே மாதத்தில் 45 நாட்களில் 19,387 மெகாவாட் அதிகரித்துள்ளது ஏறத்தாழ 3000 மெகாவாட் தமிழ்நாடு முழுவதும் உச்ச பட்ச மின் நுகர்வு அதிகரித்துள்ளது ஒருசில இடங்கலில் பழுதுகள் காரணமாக பாதிப்புகள் இருப்பினும் சீரான மின் விநியோகம் தமிழகத்தில் அளிக்கபட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளை காட்டிலும் மின் கொள்முதலில் 1312 கோடி அளவில் மின்சார வாரியம் சேமித்துள்ளது
சென்னையில் மின் தேவை 66 மில்லியன் யூனிட் ஆக இருந்த நிலையில் தற்போது 90 மில்லியன் யூனிட்டாக தேவை அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கேபிலை மாற்றி புதிய கேபில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் மின் தடை ஒரு சில இடங்களில் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மின் உற்பத்திகான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு வட சென்னை மின் உற்பத்தி நிலையில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.
மின் பற்றா குறை இல்லாததால் தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் காரணமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post