திருவண்ணாமலை அருணாச்சலேஸ் வரருக்கு பால் அபிஷேகம்..!
வைகாசி அம்மாவசையை முன்னிட்டு இன்று காலை திருவண்ணாமலை கோவிலில், அருணாச்சலேஸ்வரருக்கு, பால் அபிஷேகம் செய்யப் பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு மஹா அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.
பின் உண்ணாமுலை அம்மனுக்கு பல்வேறு வகையான மூலிகை பொடிகள், மஞ்சள் பொடி அபிஷேகமும் இதனை தொடர்ந்து. 508 லிட்டர் பால், 100 லிட்டர் நெய், 50 லிட்டர் தேன் மற்றும் 50 கிலோ ரீபூதி மற்றும் 25 கிலோ சந்தனம் கொண்டு.., அபிஷேகம் செய்யப்பட்டது.
அபிஷேகத்தை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு.., தீப ஆராதனையும் நடைபெற்றது. இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி