அரைவேக்காடு அண்ணாமலை வாட்ஸப்பில் வந்ததை நம்பி வாந்தி எடுத்துள்ளதாக மதிமுகவின் மதுரை மண்டல இணையதள பொறுப்பாளர் பி.மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1956 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்க பொன்விழா மீனாட்சி அம்மன் கோவில் ஆடிவீதியில் உள்ள ஆலயத்தில் கோலகலமாக நடைபெற்றது. அதில் சேலம் ஆசிரியர் மகளான ஒரு சிறுமி அழகாக பேசினாள். அதைப்பற்றி அறிந்த அண்ணா திருஞான சம்பந்தரை ஒப்பிட்டு பேசினார். ( ஆசிரியர் சொந்த கருத்தை கூறுகிறார்)
மறுநாள் வழக்கம் போல் கூட்டம் கூடியது தேவர் வாடிய முகத்துடன் வந்தார். பொன்விழா ஏற்பாட்டு குழு தலைவர் பிடி. ராஜனிடம் சென்று ” ஆலயத்தில் முதல் நாள் அண்ணாதுரை பேசிய தெய்வ நிந்தனை பேச்சு நல்லதல்ல.. அதுமாதிரி நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுவதுடன் இனிமேல் அம்மாதிரி நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாயானால் விழா கோவிலில் நடக்காமல் மாற்றி விடுதல் நலம். இந்த ஏற்பாட்டை பி.டி. ராஜன் சொல்ல வேண்டும் என தேவர் கேட்டுக்கொண்டார்.
பி.டி. ராஜன் தேவர் கருத்தை ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல, அத்தோடு கூட்டத்தில் யாருக்கும் எதையும் பேச உரிமை உண்டு எனக்கூறி தேவர் கூறிய ஆட்சேபனையின் உட்பொருள் அறியாமல் மறுத்தார். உடனே தேவர் என் கருத்தை சபையில் சொல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என கேட்டார். அதற்கு பி.டி.ராசன் மறுத்தார்.
பின்னர் வேறு வழியில்லாமல் தேவர் தானே ஒலிபெருக்கி முன்பு நின்று ” ஆலயத்துக்குள் யாரும் தெய்வ நிந்தனை பேச்சு பேசக்கூடாது. முதல் நாள் அண்ணாதுரை பேசிய பேச்சு தெய்வ பக்தர்களின் மனதை புண்படுத்திவிட்டது. ஆகவே பொன்விழா நடவடிக்கைகள் தொடர்ந்து ஆலயத்தில் நடத்தாது, தமுக்கத்தில் நடத்த வேண்டும்” என சொன்னார்.
இவைதான் தேவர் கூறியவை. பின்பு தன் கருத்தை நூலின் ஆசிரியர் பதிகின்றார்.
இந்த நிகழ்வை பதிவு செய்தது யாருமல்ல.. தேவரின் நிழலாக தொடர்ந்த ஏ ஆர். பெருமாள் தனது முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
நாத்திக உரைகள் ஆலயத்தில் வேண்டாம். வெளியில் பேசிக்கொள்ளுங்கள் என்று தேவர் கூறினாரே தவிர எங்குமே பேசக்கூடாது. நுழையக்கூடாது என வரம்புமீறி பேசவில்லை.
தேவஸ்தான தலையீட்டால் நிகழ்வு மாற்றப்பட்டது. இல்லை என்றால் இரத்த ஆறு ஓடி இருக்கும் என தன் கருத்தை நூலாசிரியர் பதிவிட்டுள்ளார். அரைவேக்காடு அண்ணாமலை வாட்ஸப்பில் வந்ததை நம்பி வாந்தி எடுத்துள்ளது.
1967 ல் அண்ணா தலைமையில் அணி அமைவதற்கு முக்கிய காரணம் தேவர் தந்த தேவர் மூக்கையாத்தேவர். அண்ணாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவரே மூக்கையாத்தேவர்தான்.
சிண்டு முடிந்துவிடும் உன் எஜமானர்களின் புத்தியை எங்களிடம் காட்டாதீர். உம் வாலை அவர்களிடம் ஆட்டும். எங்களிடம் வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.