ADVERTISEMENT
பாடகர் கலைமாமணி சித்தன் ஜெயமூர்த்தியின் மூன்று நூல்கள் அறிமுக விழா…
மதுராந்தகத்தில் திரையிசை பாடகர் கலைமாமணி சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திரை இசை பாடகர் கலைமாமணி சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் எழுதிய கலைகள் பேசும் இசை, நவீன நாடகங்களின் தமிழிசை, பழந்தமிழ் இசை மரபு உள்ளிட்ட மூன்று புதிய நூல்களை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கவிஞர் தேவ.ருக்மாங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், மாநில விடுதலைக் இலக்கிய பேரவை செயலாளர் யாழன் ஆதி, சுகிர்த ராணி ஆசிரியர் மற்றும் புதுவை தமிழ் சங்க செயலாளர் சீனு – மோகன் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய படைப்பினை அறிமுகப்படுத்தினர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.