கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மகளிருக்கும் நேற்று ஒரு ரூபாய் வங்கி கணக்கிற்கு தமிழக அரசு செலுத்தியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகின. இதில் தகுதியுள்ளவர்களாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த திட்டம் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துவங்கிறது.
இந்நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து நேற்றும் வங்கி கணக்குகளுக்கு 1 ரூபாய் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க : ஊழியர்களுக்கு தாமரை சீருடை… பாஜகவின் அடுத்த பகீர் செயல்திட்டம்..!