தங்க அலங்காரத்தில் மஹா கணபதி..!
கோயம்புத்தூர் மாவட்டம் ராம் நகரில் அமைந்துள்ள பிரசன்ன மஹா கணபதி கோவில், வைகாசி வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தது. இந்த வழிபாடுகளை தொடர்ந்து, தங்க காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றார்கள்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.

















