தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் இருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
தற்போது ஜப்பானின் ஒசாகாவில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ மாநகரத்திற்கு புல்லட் இரயில் மூலமாக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டோக்கியோ இரயில் நிலையத்தில் ஜப்பான் நாட்டிற்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள முதல்வர் “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!” எனக்குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post