மதுபான கொள்கை முறைகேடு வழக்கு..!! அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்த நீதிமன்றம்..!!
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்., அதன் பின் ஜூலை 12-ம் தேதி அமலாக்கத் துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் முடிவடைந்த நிலையில் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார். இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை மீண்டும் ஜூலை 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து ஜாமீன் கோரியும், வழக்கை அவசர வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்திருந்தார்…
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 1௦ம் தேதி டெல்லி கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செப்டம்பர் 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.. “சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்றும் குற்றபத்திரிக்கையில் சரியான ஆதாரங்கள் இல்லை என்றும் நீண்ட காலம் சிறையில் இருப்பது அநியாயமாக ஒருவரின் சுதந்திரத்தை பறிப்பதாகும்” என கூறி ஜாமீன் வழங்கினார்.. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததையொட்டி ஆம் ஆத்மி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்…