11 வாலிபார்கள் கடத்தல்..!! கட்டு கட்டாக சிக்கிய பணம்..! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பல திடுகிடும் தகவல்கள்..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜார்கண்ட் மாநில 11 வாலிபர்களை காரில் கடத்தி ₹2.20 லட்சம் பணம் பறித்துக் கொண்டு தப்பித்துச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அசாம் மாநிலம், காச்சுவா, நாஜோன் பகுதியை சேர்ந்தவர் அபுன் நோசர் என்பவரின் மகன் வாசிம் அக்ரம் (27). இவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு ரயிலில் செல்லும் போது ரயிலில் பயணம் செய்த ஒரு வாலிபர் விசிட்டிங் கார்டு கொடுத்து வேலை ஏதாவது வேண்டும் என்றால் போன் செய்யுமாறு கூறியுள்ளார்.
பின்னர் கேரளாவில் வேலை கிடைக்காததால் விசிடிங் கார்டில் இருந்த நம்பருக்கு வாசிம் அக்ரம் போன் செய்துள்ளார். அப்போது பேசிய நபர் தனது பெயர் தீபக் என்றும் நீங்கள் வந்தால் வேலை வாங்கி தருவதாகவும் ஒரு நாளைக்கு 700 ரூபாய் சம்பளம் என்றும், உங்களுடன் ஏழு பேர் எட்டு பேர் இருந்தாலும் அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து தனக்கு போன் செய்யுமாறு கூறியுள்ளார். இதை உண்மையான நம்பிய வாசிம் அக்ரம் என்பவர் அமர் உசேன் (21), முபில் உசேன் (24), பொது ருகின் (19), ஆகியோரை அளித்துக் கொண்டு கடந்த 18ஆம் தேதி அதிகாலை பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
பின்னர் தீபக் செல்போனுக்கு போன் செய்து பொது அவர் திருப்பத்தூர் பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வருமாறு கூறியுள்ளார். பின்னர் அங்கு சென்றபோது பாலமுருகன் என்பவரும், அஜய் என்கிற சமீர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றுக்கொண்டு ஜோலார்பேட்டை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் உள்ள தனி அறையில் அடைத்து வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி கைகளாலும் கால்களாலும் சரமாரியாக தாக்கி அவர்களிடம் பணத்தை கேட்டு கொலை மிரட்டல் எடுத்துள்ளனர்.
இதனால் உயிருக்கு பயந்து நான்கு பேரும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து ஜிபி மூலம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை குடும்பத்தார் அனுப்பி உள்ளனர். பின்னர் 8 பேர் கொண்ட கும்பல் அவர்களின் ஏடிஎம் கார்டை பறித்து ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு நான்கு பேரையும் காரில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடமான ஆம்பூர் அருகே இறக்கி விட்டு, இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உங்களை கண்காணித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்த அசாம் மாநில வாலிபர்கள் புகார் அளிக்காமல் மீண்டும் வேலைக்காக கேரளாவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் இதே கும்பல் கடந்த 19ஆம் தேதி திருப்பத்தூர் பகுதியில் வேலை வாங்கி தருவதாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகமது அப்துல் அன்சாரி (27) உள்ளிட்ட இவரது நண்பர்கள் 7 பேரை வரவழைத்து அவர்களையும் 9 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று தனி அறையில் அடைத்து வைத்து பணத்தைக் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் இவர்களும் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து கியூ ஆர் கோடு மூலம் பணத்தை அனுப்பி ₹1.20 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு அவர்களை வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே இருள் சூழ்ந்த இடத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
அப்போது கடத்திய கும்பலில் ஒருவரான அரவிந்தன் என்பவரை ஜார்கண்ட் மாநில வாலிபர்கள் காரில் இருந்து பிடித்து இழுத்து கீழே தள்ளி புரண்டு உள்ளனர். இதனால் சத்தம் கேட்டு அருகில் வந்த கூட்டத்தைக் கண்டு காரில் இருந்த மற்ற 8 பேர் அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளனர். பின்னர் பிடிபட்ட அரவிந்தனை பொதுமக்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் சம்பவ இடம் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டதால் இது குறித்து முகமது அப்துல் அன்சாரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தனிப்படையினர் கேரள மாநிலம் ராம்நாடு பகுதிக்கு சென்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி, வடமலம் பட்டி பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் மகன் நிஷாந்த் (27), பச்சையப்பன் மகன் பிரபு (29), திருப்பத்தூர் மாவட்டம் கூடப்பட்டு அடுத்த ராஜபாளையம் முருகன் என்பவரின் மகன் பாலமுருகன் (25), ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், வலிமை வீதி பகுதியை சேர்ந்த செல்லமணி என்பவரின் மகன் பிரசாந்த் (26), தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ். பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் பிரேம்குமார் (24), ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வலசி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த அறிவழகன் மகன் விஜய் (27) ஆகியோரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரிடம் ₹1.20 லட்சம் ரூபாயும், அசாம் மாநிலத்தை சேர்ந்த 4 பேரிடம் ஒரு லட்சம் ரூபாயும் அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்தது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் இதே போன்று ஆட்களை கடத்தி அறையில் அடைத்து வைத்து பணம் பறித்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.