கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பொது மக்களிடம் வேண்டுகோள்..!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு, நிதியுதவி அளித்து உதவுமாறு “கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்” கேட்டுக்கொண்டதன் பெயரில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 280க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதில் 10 தமிழர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள நிலச்சரிவு மீட்பு நிவாரண பணிகளுக்கு நிதியுதவி வழங்குங்கள். ஒவ்வொரு பங்களிப்பும், குறைந்த தொகையாக இருந்தாலும் அது மிகவும் உதவியாக இருக்கும்.
கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கான வங்கிக் கணக்கு 67319948232 எண்ணில் நிதியுதவி வழங்கலாம். Keralacmdrf@sbi என்ற கூகுள் பே கணக்கிலும் நிதியுதவி அளிக்குமாறு நேற்று எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் பேரில் தற்போது சமூக ஆர்வலர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்..
Account Number: 67319948232
Name: Chief Minister’s Distress Relief Fund
Bank: State Bank of India
Branch: City Branch, Thiruvananthapuram
IFSC: SBIN0070028
SWIFT CODE: SBININBBTOB
Account Type: Savings
PAN: AAAGD0584M
போன் பே / கூகுள் பே keralacmdrf@sbi
நிவாரண உதவியாகப் பொருட்களை வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்..!
உபயோகப்படுத்திய பழைய பொருட்களைக் கொண்டு வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது..!