ஜம்மு காஷ்மீரில் ஆனந்நாக் மாவட்டம் பஹலம்பூரில் The Resistance Front என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 27 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நீக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் The Resistance Front தீவிரவாத அமைப்பு உருவானது. ஷேக் ஷஜீத் குல் இந்த சுப்ரீம் காமெண்டராகவும் பஷீத் அகமது தார் என்பவர் தளபதியாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஷேக் ஷஜீத் குல் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரால் தொடங்கப்பட்ட The Resistance Front அமைப்புக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
காஷ்மீரில் உள்ளுர் மக்கள், வெளிநாட்டு மக்களையு குறி வைத்து இந்த இயக்கம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் நடந்து வரும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநிலத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில், இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள்.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லஸ்கரி இ தொய்பா தீவிரவாத குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது, ஏப்ரல் மாதத்தில் காஷ்மீர் ரத்தத்தில் குளிக்க வேண்டுமென்று சபதம் எடுத்துள்ளனர். இதையடுத்தே, காஷ்மீரில் கொடூரத் தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.
தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து, காஷ்மீரில் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்றிரவு பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இரு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.