Madhimugam
Wednesday, May 18, 2022
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • சாமானியனின் குரல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • சாமானியனின் குரல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT
Home அரசியல்

கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது – அமைச்சர் துரைமுருகன்

in அரசியல்

தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது.

இதுதொடர்பாக காவிரி நிர்வாக ஆணையம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த நீர் பங்கீட்டு முறையை பின்பற்றி வருகிறது. இருப்பினும் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம், கர்நாடகம் இடையே உரிய முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து சர்ச்சை நிலையே நீடித்து வருகிறது.

இதற்கிடையே, காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது. ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும் என கர்நாடக சட்டசபையில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவுகளின் படி தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், காவிரி ஆற்றில் அணை உள்ளிட்ட எதுவும் கட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் அசைவு இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது. இது கர்நாடக அரசுக்கும் நன்றாக தெரியும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியானது. அதற்கு கீழ்படிந்து நடப்பது தான் இந்திய ஜனநாயகம்.

ஒரு மாநிலமே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், பிறகு இந்தியாவில் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? மத்திய அரசு அவ்வளவு சுலபமாக சாய்ந்துவிடாது என்று நான் கருதுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Tags: #cauvery#karnataka#tamilnadu
ADVERTISEMENT
Previous Post

”வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு” : முதல்வர் பேச்சு…!!

Next Post

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக

Digital Team

Digital Team

Next Post

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன ?

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

நிச்சயார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இன்ப அதிர்ச்சியளித்த நிக்கி கல்ராணி…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக

கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது – அமைச்சர் துரைமுருகன்

Trending News

நிச்சயார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இன்ப அதிர்ச்சியளித்த நிக்கி கல்ராணி…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக

கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது – அமைச்சர் துரைமுருகன்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • சாமானியனின் குரல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.