காதல்மன்னன் காதல் வரலாறு..! ரசிகையின் கவிதை..!
முகவரி தெரியாத ஒரு மனிதன் தன்னம்பிக்கையோடு போராடி பல தடைகள் தாண்டி எத்தனையோ இன்னல்கள் சூழ்ந்து நின்ற போது அதை உடைத்து துணிவோடு போராடினார்.., ஒரு சிலர் கொடுத்த விமர்சனங்களை எல்லாம் பொருட் படுத்தாமல் விடாமுயற்சியோடு போராடினார்..,
கன்னி பெண்களால் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட நம்ப தீனா ஒரு பெண்ணை பார்த்து காதலித்து அந்த பெண்ணுக்காக காதல் கோட்டை ஒன்றை கட்டினார்.., ஊரெங்கும் அமர்க்களம் செய்தாலும் இவர் அவர் காதலிக்கு ராஜாவாக இருந்தார்..
அவள் வருவாளா என கல்லூரி வாசலில் தனது காதலியை பார்க்க ஆசை ஆசையாக காத்துக் கொண்டிருந்த நம்ப காதல் மன்னனை, பவித்ரா, அமராவதி என பல பெண்கள் காதலித்தார்கள்..,
ஆனா நம்ப காதல் மன்னன், பூவெல்லாம் உன் வாசம் பார்த்து இருக்க வேறு ஒரு பெண்ணை காதலிக்க மனம் இல்லை ஏன் என்றால் என் ஆனந்த பூங்காற்றே நீ தானே என சொன்னார்..
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை தேடி வந்தேன் இதனால் பலருக்கு வில்லன்-ஆக தெரிந்தாலும் என் அட்டகாசம் எல்லாம் அசல் ஆனது..,
நீ வருவாய் என என் வாசல் பார்த்து இருந்தேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.., என நீ சொன்னாய் ராஜாவின் பார்வையில் நீ தெரிந்தாலும் உனக்கு ராஜா நான். என் காதல் தேவதை நீ உனக்காக கிரீடம் சுமத்தி புது வாழ்க்கையை ஆரம்பம் செய்தேன்..,
நமக்கென்று ஒரு காதல் வரலாறு எழுத ஆசை.., உயிர் உள்ளவரை உனக்கு விஸ்வாசம்-ஆக மட்டுமல்ல உனக்காக வாழவும் ஆசை “என் அருகில் கண் அருகில் நீ வேண்டுமே”
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோ தான் என சொல்லும்படி இருக்கும் அவரின் உதவிகள்.., தான் செய்த உதவிகளை வெளியில் சொல்லாமல் இணையதளங்களில் பதிவிடாமல் உதவி செய்வார்..,
தன்னிடம் வேலை பார்த்த வேலை ஆட்களுக்கு வீடு கட்டி கொடுத்து.., படிப்பு செலவிற்கு உதவி செய்தவர்..
உழைப்பாளர்கள் தினத்தில் பிறந்து.., என்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் தல “அஜித்குமார்” அவர்களுக்கு மதிமுகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-லோகேஸ்வரி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..