உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ள சஞ்சிவ் கன்னாவின் பதவிக்காலம் வரும் மே 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அவர் தனக்கு பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியதாக பி.வி. காவாயை பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்கவுள்ளார். இதுவரை ஒரே ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். அவர், கேரளத்தை சேர்ந்த கே.ஜி. பாதலகிருஷ்ணன். அந்த வகையில், பட்டியலினத்தை சேர்ந்த இரண்டாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமை பி.ஆர். கவாய்க்கு கிடைத்துள்ளது. பூசன் ராமகிருஷ்ண கவாய் என்பது இவரின் பெயரின் விரிவாக்கம்.
தற்போது, உச்சநீதிமன்றத்தில் சஞ்சிவ் கன்னாவுக்கு பிறகு சீனியர் கவாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே 14ம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் இவர், இதே ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். மகாஸ்டிர மாநிலம் அமராவதியில் 1960ம் ஆண்டு பிறந்த இவர் நாக்பூர் பல்கலையில் சட்டம் படித்தார். “
மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி கொண்டிருந்த போது, கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியானார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்துக்கான 370 சட்டப்பிரிவை நீக்கிய வழக்கில் 5 பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் பி.ஆர். கவாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் தந்தை ஆர்.எஸ். கவாய், கேரளா, சிக்கிம், பீகார் மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர்.
.