டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவிக்கு… நடந்த கொடுமை…
புதுக்கோட்டையில் டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வென்ஷீலிக் இஸ்ரேல் பிட்டு என்பவர் புதுக்கோட்டை கூடல் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் புதுக்கோட்டை மவுண்ட் ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதே பள்ளியில் கடந்த 2022 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார்.
அப்போது, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் செய்தது உறுதியான புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)