ஆரம்பத்தில் மெரினாவில் சுண்டல் விற்றேன்..!! இப்போ 10 ஹோட்டலுக்கு ஓனர்..?
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானோர் ஏராளம்.., முக்கியமாக யூடியுப் மூலம் பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி.., பிரபலமும் ஆகின்றனர். பொழுது போக்காக தொடங்கி அதையே இன்று முழுநேர வேலையாக பார்பவர்கள் அதிகம்.
அந்த வரிசையில் உணவுகள் பற்றி வீடியோவாக போட்டு பிரபலம் அடைந்தவர் “சிவக்கண்ணன்” . உலகெங்கும் பல இடங்களில் உள்ள உணவுகள் குறித்து ரிவியூ கொடுப்பது இவரின் வேலை.., யூடியூப் மூலம் பிரபலமான இவர் முந்தைய காலத்தில் என்ன செய்துக் கொண்டிருந்தார் தெரியுமா..?
சிவக்கண்ணன் ரெஸ்டாரண்ட் வைத்துள்ளவர், இவரின் ஆரம்ப காலத்தில் இவர் பார்த்திடாதா கஷ்டங்கள் இல்லை, பள்ளி படிக்கும் பொழுதே மெரினாவில் சுண்டல் விற்று வந்துள்ளார், காரணம் இவருக்கு மூன்று தங்கச்சிகள் இருந்துள்ளனர்.
சிவக்கண்ணன் அப்பா அதே மெரினாவில் சுக்கு காபி விற்று வந்துள்ளார்.., ஒரு கட்டத்தில் சிவக்கண்ணு அப்பா இறந்து விட்டார். குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்ற சிவக்கண்ணு மெரினாவில் சுண்டல் விற்பதை நிறுத்தி விட்டு டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆனால் அதை பார்த்த குழந்தைகள் நல அமைப்பாளர் டீ கடை ஓனருக்கு பைன் போட்டுள்ளனர்.., இதனால் டீ கடைக்கு வேலைக்கு செல்ல முடியாமல் போய் விட்டது. இருந்து மனம் தளராத அவர் மதுரையில் உள்ள ஸ்விட் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு அவர் டீ போடவும், பலகாரங்கள் மற்றும் பீட்ஸா செய்யவும் கற்றுக்கொண்டுள்ளார், பின் மதுரையில் வருமானம் போதிய மானதாக இல்லை என நினைத்த அவர் திருப்பூர் சென்று டீகடைக்கு வேலைக்கு சென்றுள்ளார், அங்கு டீ கடையில் இருந்த கண்ணாடி டம்ளர் ஒன்று உடைந்து போனதால், அந்த கடை ஓனர் இவரை திட்ட, ஆத்திரமடைந்த சிவகண்ணு அங்கிருந்து வேலையை விட்டு நின்று வேறொரு பரோட்டா கடையில் மாஸ்டராக சேர்ந்துள்ளார்.
அந்த காலத்திலேயே அவருக்கு 200 ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர்.., மாதம் 6000 சம்பளம் என்றதும் சந்தோஷத்தில் மிதந்துள்ளார்.., பின் கோயம்புத்தூரில் ஒரு தள்ளுவண்டி கடை போட்டு காளான் கடை வைத்து நடத்தியுள்ளார்.., காளான் மற்றும் விற்றால் போதுமா என எண்ணி நண்டு சூப்பும் போட்டுள்ளார்.
ஆரம்பத்தில் லாபம் கொடுக்கவில்லை என்றாலும் சில ஆண்டிலேயே 2 வண்டி போட்டு விற்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.., அதில் வந்த லாபங்களை வைத்து சிறு கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.., பின் அதில் வந்த லாபங்கள் வைத்து 4 கடைகள் திறக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்த ஹோட்டல் மூலம் அவருக்கு சம்பத் கான் என்ற நண்பர் அறிமுகமாகியுள்ளார்.., பின் இவருடன் சேர்ந்து சிவக்கண்ணு யூடியூப் ஒன்றை தொடங்கி, அதில் வந்த பணம் மூலம் 10 ஹோட்டல்களுக்கு ஓனராகியுள்ளார்.
இவரின் இந்த வளர்ச்சி குறித்து விசாரித்த போது அவர் சொன்ன பதில்.., ஆரம்பத்தில் சுண்டல் விற்பதற்காக நான் வெட்கப்படவில்லை, உழைக்கும் எந்த தொழிலும் கேவலமானது அல்ல.., ஒரு நாள் பெரிய ஆளாக வேண்டும் என்ற மனவெறியுடன்.., உழைத்தால் ஜெயித்து விடலாம் என்று அவர் கூறினார்.
மேலும் இதுபோன்ற பல உண்மைக் கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்

















