வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்..!! சொன்னதுக்கு காரணம் இது தான்..!!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற ஒரு சிறந்த பொன் மொழி உள்ளது. அப்படி சொல்லியதற்கான காரணம். அப்படி சிரித்தால் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் அது ஆரோக்கியமாக இருக்கும் என்றதால் தான்.
தினமும் 15ல் இருந்து 20 நிமிடம் ஆவது சிரிக்க வேண்டும். அப்படி சிரித்தால் என்ன என்ன பயன் என்பது பற்றி பார்க்கலாம்..
மனஅழுத்தம் : ஒவ்வொரு முறையும் நாம் சிரிக்கும் பொழுது எண்டோர்பின் என்ற ஹார்மோன் வெளியாகும், எண்டோர் பின் ஹார்மோன் மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி கொண்டது. எனவே நாம் ஒவ்வொரு முறையும் வாய் விட்டு சிரிக்கும் பொழுது மன அழுத்தம் குறைகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நாம் ஸ்ட்ரெஸில் இருக்கும் பொழுது கார்டிசோல் எனப்படும் அமிலம் சுரக்கிறது. ஸ்ட்ரெஸ் லெவல் அதிகரிக்கும் பொழுது இதயத்தை பாதிக்கிறது. இதனால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க மகிழ்ச்சி மிக அவசியம்.
வாய் விட்டு நாம் சிரிக்கும் பொழுது ஆக்சிஜனேற்றம் நிகழும், இதனால் ரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராக செல்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி : சிரிக்கும் பொழுது பீடா எண்டோர்ஃபின்ஸ் மற்றும் இதர ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் உடலில் டி-செல் உற்பத்தியை தூண்டி, லிம்ஃபோசைட்ஸை உருவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி.