டேஸ்டியான பன்னீர் நூடுல்ஸ் பகோடா..!! செய்வது எப்படி..?
நூடுல்ஸ் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மேலும் அதில் பன்னீர் சேர்ந்திருப்பது இன்னும் கூடுதல் ருசியாக இருக்கும். பன்னீரில் புரோட்டின்ஸ் அதிகம் நிறைந்துள்ளது. பன்னீர் மற்றும் நூடுல்ஸ் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் மிச்சம் வைக்காமல். எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
பனீர்- ஒரு கப் துருவியது
நூடுல்ஸ் – 2 பாக்கெட்டுகள்
கான்பிளார் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – கால் கப்
குடைமிளகாய் – 1
முட்டைக்கோஸ் – 1 கப்
பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
சீஸ் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு வாண்லில் நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிச்சதும் அதில் நூடுல்ஸ் மசாலாப் பொருள்களைச் கொட்டி நன்றாக கலந்துவிட வேண்டும். பின் நூடுல்ஸ் வெந்ததும் அதனை வடிக்கட்டி தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
நன்றாக் நூடுல்ஸ் ஆறியவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், ரவை, சீஸ் மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்துவிட்டு நன்றாக கலக்க வேண்டும்.
பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் உருண்டைகளுக்கு நடுவில் சீஸ் துண்டுகளை வைத்து உருட்டிக் கொள்ளலாம்.
ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தொட்டு சாப்பிட மையோனஸ், தக்காளி, கொத்தமல்லி சாஸ் வைத்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)