அன்றும் இன்றும் என்றும் இடுப்பழகி சிம்ரன்..!!
ஹிந்தியில் கலக்கி கொண்டிருந்த சிம்ரன் தமிழில் முதல் முதலாக என்ட்ரி கொடுத்த படம் தான் “நேருக்கு நேர்” ஆனால் அந்த படம் திரையில் வெளியாக கால தாமதம் ஆனதால். தமிழில் முதலில் வெளி வந்த படம் “ஒன்ஸ் மோர்“.
முதல் படத்திலே நடிகையர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் ஆசியுடன் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து இருப்பார்.
அதனை தொடர்ந்து வெளிவந்த படம் தான் “விஐபி” பிரபுதேவாவுடன் இவர் சேர்ந்து நடித்ததில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் “மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே” இந்த பாடலில் இருந்து தான் சிம்ரனிற்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.
அதன் பின் மூன்றாவது படமாக வெளிவந்த “நேருக்கு நேர்” படமும் ஹிட் கொடுத்தது.., அதன் பின் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார்.., கமலுடன் பம்மல் கே சம்மந்தம், விஜய்காந்துடன் கண்ணு பட போகுதையா, நடிகர் அஜித்துடன் வாலி போன்ற படங்களில் நடித்தார்.
இதனால் சிம்ரன் உச்சம் தொட்டார் எனவும் சொல்லலாம், இப்படி ஹீரோயினாக உச்சம் தோட்ட சிம்ரன் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வில்லியாக நடித்து இருந்தார்.., அதிலும் “தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலில் அசத்தியிருப்பார்.
ஹீரோயினாக, வில்லியாக மட்டுமின்றி.., கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார்..,
என்னதான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்ற படத்தில் யாருக்கு ஜோடியாக நடித்தாலும் அன்று முதல் இன்று வரை “தளபதி விஜய் – சிம்ரன்” ஜோடியே ரசிகர்களுக்கு இன்று வரை பிடிக்கும் அதற்கு காரணம் “பிரியமானவளே, துள்ளாதமனமும் துள்ளும், ஒன்ஸ் மோர், யூத், உதயா, போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
ஒரு பாட்டில் நடித்தாலும் அதிலும் நான் கிங் என்று சொல்லும் அளவிற்கு “பிதாமகன்” படத்தில் வரும் “குங்கும பூவே” பாட்டு 90ஸ் கிட்ஸ் களுக்கு மட்டுமின்றி 2k கிட்ஸ்க்கும் இவர் தெரியாமல் இருக்காது ஏன் என்றால் பேட்டை படத்தில் ரஜினியுடன் இவர் நடிப்பு..
அன்று முதல் இன்று வரை இளமையாகவும் ரசிகர்கள் மனதில் நீங்காமலும் இருக்கும் சிம்ரனிற்கு மதிமுகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம் …
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..