யாருப்பா இவரு..!! இவ்ளோ அழகான பாடல்களை தந்து இருக்காரு..!!
நடிகர் விஜய் என்றாலே அவருக்கு தனியான ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு .அவரோட படம் எவளோ நல்லா இருக்கோ அந்த அளவுக்கு அந்த படத்தோட பாடல்களும் அனைவரும் கவரும் .
அந்த வகையில் ஹரிகரன் விஜய்க்கு குடுத்த பாடல்களை பார்க்கலாமா .
தன்னுடைய காதலனை எப்படி எல்லாம் அழைக்க வேண்டும் என்று , நீ என்னை விட்டு பிரிந்தால் என்னோட பிறவி முடிந்திரும் , நீ திரும்பி வந்து சேர்ந்தால் மறுபிறவி கிடைக்கும் என்று கூறிகிறாள் அந்த காதலி .
நீயும் என்னை பிரிந்தால். எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்.., மறு பிறவி தொடருமே…….
தன்னுடைய மனைவியே ஒரு தோழியாக வரவேண்டும் என்றும் , உன்னுடைய முகத்தை பார்க்க தோணும்போதெல்லாம் பூக்களை பார்த்து ரசித்து கொள்ளுகிறேன், உன் பெயரை சொல்லனு தோணும் போதும் பூக்களிடம் சொல்லி போகிறேன் என்று கூறுகிறார் கணவன் .
உன் முகம் பார்க்க.. தோன்றினால். பூக்களை பார்த்துக்கொள்கிறேன்.
பூக்களின் காதில் செல்லமாய், உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
எனக்கொரு சினேகிதி…,சினேகிதி தென்றல் மாதிரி….
நான் நிம்மதியாக உறங்குவதற்கு என்னை தாலாட்டு பாடி உறங்க வைப்பதற்கு அவள் வருவாளா என்று காத்திருக்கிறான் காதலன் இல்லை என்னை ஏமாற்றிவிடுவாளா ?
என்னை தாலாட்ட வருவாளோ… நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்… நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்…
உலகில் நுறு கோடி பெண்கள் இருந்தாலும் உன்னைப்போல் யாரும் இல்லை என்று உருகி படுகிறான் காதலன் .
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…
இதுபோன்ற அழகான காதல் பாடல்களை கொடுத்த பாடகர் “ஹரிஹரன்” அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாளிற்கு மதிமுகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
-சரஸ்வதி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..