மனைவியின் இறப்பிற்கு நான் தான் காரணம்.. மருத்துவரின் விபரீத முடிவு..!
சேலத்தில் உள்ள வாய்க்கால் பட்டறை, வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இனியவன். மருத்துவரான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி என்ற ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர், அம்மாபேட்டையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக்கடன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வங்கியில் பணியாற்றிய செங்கோட்டுவேல் என்பவரது மகள் சவுமியாவுக்கும், இனியவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, இனியவன் தனது மருத்துவ பயிற்சிக்காக 6 மாதங்களுக்கு வெளியூருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அதுவரை தனது மனைவியை சேலத்தில் உள்ள அவரது தாயாரின் வீட்டிற்கு சென்று தங்கி இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 7-ம் தேதி சவுமியா தனது அறைக்கு தூக்குவதாக கூறி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் மனைவியின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் எண்ணிய இனியவன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தியுள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இனியவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி இறப்பதற்கு நான் தான் காரணம் என எண்ணி இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்