பரிசுத்தமான தாய்ப்பால் கலப்படாமாக விற்பனை..! முக்கிய நகரங்களில் சோதனை..!
மாதவரம் தபால்பெட்டி கே.கே.ஆர் கார்டன் பகுதியில் தாய்ப்பால்கள் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சில சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ், அருள்மொழி, கஸ்தூரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை கே.கே.ஆர் கார்டன் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
பதப்படுத்தபட்ட தாய்ப்பால்களை 200 மி.லி பாட்டிலில்களில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் செம்பியன் முத்தையா என்பவரிடம் நடத்திய விசாரணையில், புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் கடை நடத்துவதற்கு அனுமதி பெற்று,
தாய்ப்பால் தானம் செய்யும் தாய்மார்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலம் தாய்ப்பாலை வாங்கி அதில் மூலப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் தாய்ப்பால் வராத பெற்றோர்களுக்கு 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.. அவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. வேறு பொருட்கள் விற்பனை செய்ய உரிமம் பெற்று தாய்ப்பால் விற்றால் உரிமத்தை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் சோதனை.
நேற்று தாயப்பால்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சோதனை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை 94440 43232 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..