கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா திறப்பு ..! மோடி இனி சும்மா தான் இருப்பாரு..! நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சியை நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.., பேச்சு வரவில்லை மனது 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது..
30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்த போது இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். கலைஞருடன் இருப்பது போலவே ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அதை இன்றைய தொழில்நுட்பம் செய்துள்ளது.
2 வருடங்கள் கலைஞரை ஸ்டடி பண்ண வேண்டி இருந்தது.. கலைஞரின் வாழ்க்கையின் பயணத்தை என்னால் உணர முடிந்தது.. இப்படி நான் இன்று பேசுகிறேன் என்றால் இப்படிப்பட்ட மனிதரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உடனிருந்து ஸ்டாலின் செய்தது தான் அதற்கு காரணம்..
கலைஞர் இருந்திருந்தால் இப்படி பேச வேண்டிய அவசியம் என்று வந்து இருக்காது. அவர் இருந்த வரை எவரும் இங்கு வாலாட்ட முடியவில்லை.. ஒரு நூற்றாண்டில் கலைஞரை கொண்டாடி வருகிறோம்.
கலைஞர் இல்லை என்றால் இன்று நான் ஐஏஎஸ் ஆபிஸராக ஆகியிருக்க மாட்டேன் என்று ஒரு அதிகாரி சொல்கிறார். கலைஞருடன் நிறைய அனுபவங்கள் எனக்கு உள்ளது
கலைஞருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர் கொள்கைகளை சிந்தனையையும் உயிரோடு இருக்கிறது. என்றால் நன்றி. இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது இன்னும் முன்னேறும்.
கலைஞரின் விதை தமிழ்நாட்டின் மக்களுக்குள் உள்ளது, அது தான் இந்த மன் அழகாக உள்ளது, ஒரு போராளியின் நிலமாக உள்ளது.. நிறைய சூட்டிங் பார்க்க மக்கள் வருவார்கள். ஆனால் கன்னியாகுமரி சூட்டிங்ற்கு அவரே ஆடியன்ஸைக் கூட்டி செல்கிறார்..
தற்போதைய காலகட்டத்திற்கு கலைஞர் ஒருவரே போதும், அவரால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும் அந்த கணக்கில் நாம் கலைஞரை பார்க்க வேண்டும்.
தோல்விக்கான அனைத்து வேலையும் மோடி செய்து விட்டார்.., முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நிறைய விஷயங்களை செய்து வருகிறார். வளர்ச்சி தெரிகிறது, யாரையும் எதிர்த்து பேச வேண்டிய துணிச்சல் இருக்கிறது. அது தான் தமிழ் நாட்டின் குரல் அடையாளம், ஒரு முதல்வரை அப்படி நிக்கும் பொழுது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது.
ஸ்டாலின் சாரும், ஆட்சியை நான் பாராட்டுகிறேன், எனக்கு தமிழ்நாட்டில் வீடு உள்ளது என்று நம்பிக்கை வருகிறது, அவனால் இங்கிருந்து நுழைய முடியவில்லை, என் செல்லத்தை ஒன்னும் செய்ய முடியாதுல்ல நாடு அப்படி இருக்கு..
பாடலாசிரியர் பா.விஜயா பேசியது.. இரண்டாம் கலைஞராக நம்முடைய முதல்வர் செயல்பட்டு வருகிறார்..
ஒரு அற்புதமான கண்காட்சி நூற்று நாற்பது படங்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டு இடத்தில் ஹாலோகிராம் வைத்துள்ளோம், கலைஞரை நேரில் பார்ப்பதைப் போல் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம்.
இந்த நிகழ்ச்சி 7 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வர உள்ளனர். 4 ஆம் தேதிக்கு பிறகு மோடியும் சும்மாதான் இருப்பார். அவரையும் இங்கே இந்த கண்காட்சியை பார்க்க அழைக்கலாம் என்றார்.. இதில் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் பிரியா ராஜன், மற்றும் பலர் உடன் இருந்தனர்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..