கடுமையான வெப்பத்திலிருந்து விடுபட்டு, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் ( என்.சி.ஆர் ) இன்று மே 2 வெள்ளிக்கிழமை அதிகாலையில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. Heavy Rain in Delhi Today
இதனால் டெல்லியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வானிலை சில விமான சேவைகளையும் பாதித்துள்ளது.
வட இந்தியாவில் பாதகமான வானிலை காரணமாக விமான அட்டவணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளது என்று டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சார்பாக இன்று டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆரின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
https://x.com/i/status/1918111890200510583
லஜ்பத் நகர், ஆர்.கே.புரம், துவாரகா உள்ளிட்ட டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துவாரகா, ரோகினி, உத்தம் நகர், வசந்த் குஞ்ச், சாகேத் மற்றும் சத்தர்பூர் போன்ற பகுதிகளிளும் கடுமையான அளவில் தண்ணீர் தேங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று, டெல்லியின் சஃப்தர்ஜங் வானிலை நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இது இயல்பை விட கிட்டத்தட்ட ஒரு படி குறைவாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது, இது இயல்பை விட 2 டிகிரி அதிகமாகும். இதற்கு இடையே திடீரென இன்று கணிக்க முடியாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
இதனிடையே டெல்லி NCR பகுதியில் கடுமையான வானிலை நிலவும் என்று வானிலை மையம் IMD எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Heavy Rain in Delhi Today