வெள்ள நிவாரண நிதி இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதி!
வெள்ள நிவாரண நிதி இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை வெள்ள பாதிப்பு நிதிக்கு 1 வாரத்தில் டோக்கன் வழங்கப்பட்டு உடனடியாக நிவாரண தொகை 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதற்கிடையே, வெள்ள பாதிப்புக்கான நிவாரன தொகையை 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப போர்க்கால அடிப்படையில் நிவாரணங்களை உடனடியாக வழங்கவேண்டு என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குகான நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
விலைவாசியின் அடிப்படையில், குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.