கள்ளகாதலிக்கு அதிக அளவில் கடன் வாங்கி கொடுத்த காதலன்.. இறுதியில் பண நெருக்கடி…!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் ஷாஜி (43) என்பவர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். . இவருக்கு திருமணமாகி அவரது மனைவி அதே பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
ஷாஜி தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பு அவரது மனைவியை பள்ளியில் விட்டு செல்வதும் மாலை அழைத்து வருவது வழக்கம்.
இந்தநிலையில் சம்பவ தினதன்று வழக்கம்போல் ஷாஜி தனது மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார், அதன்பின் மாலை ஆனதும் மனைவியை பள்ளியிலிருந்து அழைத்து செல்ல வரததால் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் அச்சமடைந்த ஷாஜியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாஜியை தேடி வந்தனர். அப்போது அவருடைய கார் ஆனப்பாறை பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்தது.
தகவலில் அடிப்படையில் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அவர் தன்னுடைய கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ஷாஜியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களிடம் விசாரித்தபோது அவர் கள்ளக்காதலிக்கு அதிக அளவில் கடன் வாங்கி கொடுத்ததும், அந்தக் கடனை திரும்ப செலுத்தாததால் வங்கியிலிருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டதையும் கூறினர்.
ஒருவேளை பண நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணம் உள்ளதா என்று திவீர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்