ADVERTISEMENT
மாநிலத்தின் நிதி நிலையின் சக்திக்கு மீறி பல திட்டங்களை முதலமைச்சர் செய்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவிப்பு
மாநிலத்தின் நிதி நிலையின் சக்திக்கு மீறி பல திட்டங்களை முதலமைச்சர் செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் 70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், 53.45 கோடி மதிப்பிலான புதிய பல்நோக்கு கூடம் மற்றும் 12.87 கோடி மதிப்பிலான புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தனது வீட்டில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிப்பவைதான் என தெரிவித்தார்.
மாநிலத்தின் நிதி நிலையின் சக்திக்கு மீறி பல திட்டங்களை முதலமைச்சர் மக்களுக்கு தந்துகொண்டிருப்பதாக தெரிவித்த அவர், தமிழக மக்கள் ஒன்றிய அரசுக்கு வரியாக ஒரு ரூபாயை செலுத்தினால், அதில் இருந்து தமிழகத்திற்கு 26 பைசா தான் திருப்பித் தருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)