ADVERTISEMENT
அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக வைகோ கண்டனம்
அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட்டத்தொடர் தொடங்கியபோது, சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் மரபு என சுட்டிகாட்டியுள்ள வைகோ, ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதி செயல் என குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்பு தெரிவித்துள்ள வைகோ, ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.