கவுண்டபாளையம் கருமாரியம்மன் கோவில் 51ம் ஆண்டு கும்பாபிஷேகம்..!
கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம் பாளையத்தில் புகழ்பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. கருமாரியம்மன் கோவிலில் உள்ள சக்தி பீடம் மற்றும் மாசாணி அம்மனுக்கு 51ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் பல்வேறு பெண் பக்தர்கள் கலந்துக்கொண்டு புனித கலசதண்ணீரை வீதி ஊர்வலமாக எடுத்துக்கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின் சிறப்பு அலங்காரத்தில் கருமாரி அம்மன் பக்கதர்களுக்கு காட்சி அளித்தார். கலசம் ஏந்தி அபிஷேகம் செய்த அனைவர்க்கும் சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.