பஞ்சாப் ஃபதேகர் சாஹேப்பி அருகே கோர இரயில் விபத்து..! விபத்து குறித்து வெளியான அதிர்ச்சி காரணம்..!
பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹேப்பி அருகே இன்று 2 விரைவு இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இரண்டு சரக்கு ரயிலின் இஞ்சின் தடம் புரண்டு பயணிகள் இரயிலின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 லோக்கோ பைலட்டுகள் காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணங்கள் :
சரக்கு இரயிலுக்காக கட்டப்பட்டுள்ள பாதையில் ஏற்கனவே நிலக்கரி ஏற்றி செல்வதற்காக 2 ரயில் பெட்டிகள் அங்கு நின்றுள்ளது.
அதன் எதிர்புரம் வந்த சரக்கு இரயிலின் இஞ்சின் மோதியதில் அருகில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மோதி அந்த சரக்கு இரயில்கள் இஞ்சின் மீது விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. பயணிகள் நின்றுகொண்டிருந்ததால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சரக்கு ரயிலின் எஞ்சின் அகற்றப்பட்டது. உடன் பயணிகள் ரயிலின் எஞ்சின் மாற்றப்பட்டு பிறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
– வெ.லோகேஸ்வரி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..