தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!
தென்தமிழக பகுதிகளின் வளிமண்டல கீழடுக் சுழற்சி நிலவுகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்துள்ளது.
மேலும் நாளை முதல் இன்னும் 3 நாட்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-பவானிகார்த்திக்