புதன் கிழமை விநாயகர் வழிபாடு..!!
புதன்கிழமை விநாயகருக்கு மிகவும் உகுந்த நாள், வாரந்தோறும் புதன் கிழமை அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் சிறப்பாக நடைபெறும்.
வாரந்தோறும் புதன் கிழமை அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வந்தால் வினைகள் நீங்கி விடும்.
சதுர்த்தி அன்று விரதம் இருந்து, விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து கோவிலுக்கு சென்று விநாயகருக்கு பூஜை செய்து பிரசாதமாக வழங்கி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
வாரந்தோறும் புதன் கிழமை அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று பெண்கள், நெய் தீபம் ஏற்றி சுண்டல், கொண்டைக்கடலை பிரசாதமாக கொடுத்து வழங்கினால், திருமண தடை நீங்கி விடும்.
சதுர்த்தி அன்று விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தால், நோய்கள் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post