சென்னை தலைமை செயலகத்தில் வைத்து இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது அந்த பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
அந்த வாக்காளர் பட்டியலி படி அதிகபட்சமாக சென்னையிலுள்ள சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் மற்றும் துறைமுகம் தொகுதியில் குறைந்த அளவில் வாக்காளர்கள் உள்ளனர் மேலும்,தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களாக 45 880 பேர் உள்ளனர். 80 வயதை கடந்த வாக்காளர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,25,494 பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
Discussion about this post