நமக்கு கெடுதல் நினைச்சாலும் நம்ப நல்லதையே நினைப்போம்..!! அதுக்கான பலன் நமக்கு இப்படி கூட கிடைக்கும்..!! குட்டி ஸ்டோரி-22
ஒரு அடர்ந்த காடு அதில் இரண்டு தூக்கணாங் குருவிகள் மரத்தின் மீது கூடு கட்டி வாழ்ந்துட்டு வருது.., ஒரு நாள் இறையே தேடுறதுக்காக தூக்கனாங்க குருவி போயிடுது.
அந்த சமையத்துல ஒரு சிட்டுகுருவி தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள நுழையுது.., அதன் பின் தூக்கணாங்குருவி அத கூட்டுக்குள்ள போற அப்போ அந்த சிட்டு குருவி வந்து.., நில்லு எங்க வரணு கேட்டுச்சு..
அதுக்கு தூக்கணாங்குருவி சொல்லுது.., இது என்ன கேள்வி அது எனக்கு சொந்தமான வீடு நான் தானே உள்ள போகணும் கேட்டுச்சு..
அதுக்கு குருவி சொல்லுது இப்போ அது என் வீடு.., இனி இந்த கூடு எனக்கு மட்டும் தான் சொந்தம் நீ போனு சொல்லி விரட்டி விடுது..
உடனே அந்த தூக்கணாங்குருவி ரொம்ப சோகமா அங்க இருந்து பறந்து போகுது.., அதுக்கு அப்புறம் அந்த கூட்டுல குருவி அதோட ஜோடி குருவி கூட ஜாலியா இருந்துட்டு வந்துச்சாம்..
திடீர்னு ஒருநாள்.., ரொம்ப பலத்த மழை பெய்து.., அப்போ அந்த தூக்கணாங்குருவியோட கூடு கீழ விழுந்துடுது.., அந்த அடை மழையில மரத்தோட கிளையில அந்த இரண்டு குருவியும் இருந்து இருக்காங்க..,
அப்புறம் மழை நின்னதுக்கு அப்புறம் எங்க போறது தெரியாம அந்த இரண்டு குருவியும் யோசிச்சுட்டே பறந்து போய் வேறொரு கிளையில உட்காருது.., அப்போ அந்த தூக்கணாங்குருவி அங்க இன்னொரு கூடு கட்டி வெச்சு இருக்கு.., இந்த குருவி போய் நடந்தது எல்லாத்தையும் சொல்லுது உடனே அந்த தூக்கணாங்குருவி சரி இந்த கூடு உங்களுக்கு உதவியா இருக்கும் நீங்க எடுத்துகங்க சொல்லுது..,
அதுக்கு அந்த குருவி இல்லை உன் கூட நான் எடுத்ததுக்கு தான் கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துட்டாரு.., நீ கூடு எப்படி கட்டணும் எனக்கு சொல்லி கொடு நான் கத்துக்கிறேன் சொல்லுது..
அப்புறம் இந்த தூக்கணாங்குருவி கூடு கட்ட சொல்லி கொடுத்து உதவி பண்ணுது.,
“நமக்கு ஒருத்தங்க கெடுதல் பண்ணாலும் நம்ப நல்லதையே பண்ணுவோம்“.., ஒரு நாள் அந்த தவறை அவங்க உணருவாங்க..
இதையும் படிக்க மறக்காதிங்க : ஒருத்தன் வெளிச்சத்துக்கு வர இவங்க இப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்களா..? குட்டி ஸ்டோரி-21