தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைரீதியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி பேசுகையில்,யுஜிசியானது மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது.ஆனால்,இதனை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் நுழைவுத்தேர்வு எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும், அதனை முதல்வர் முக ஸ்டாலின் தீவிரமாக எதிர்பார். கல்லூரிகளில் இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் எந்த காலத்திலும் கலை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வுக்கு அனுமதி இல்லை. நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம்” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post