அதிகாலை கர்நாடகாவில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பெண் யானை உயிரிழந்து கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையின் விசாரணையில் நெடுஞ்சாலையில் சென்று லாரி மோதி விபத்துக்களான அந்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தேசிய பூங்கா புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக அந்த இடத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் 9 மணி முதல் காலை 6 மணி வரையில் வனவிலங்குகள் நலனுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கும். இந்நிலையில் நேற்று இரவு சரக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் யானை மீது அந்த லாரி மோதியுள்ளது.
லாரி மோதியதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதி வனத்துறை போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது ஓட்டுநர் அய்யாசாமி, உதவியாளர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனால் தற்காலிகமாக கர்நாடக – கேரள தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, வாகன போக்குவரத்தை நிறுத்தபட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசிடம் விலங்குகளை பாதுகாப்பதற்கு போதுமான திட்டங்கள் இல்லாததால் தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.