வெளியான தேர்தல் அறிக்கை..!! காங்கிரஸின் அப்டேட்..?
மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை மேற்கொண்டது.
மேலும் ஆலோசனை கேட்பதற்காக தொடங்கப்பட்ட இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி, தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வைத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நிகழ்வில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக பேசிய ப.சிதம்பரம், நீதி என்பதை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசினார். அதன்படி, மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் சாசன 8-வது அமைப்பில் ஏனைய மொழிகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
நீட் தேர்வு கட்டாயமல்ல என்றும், நீட் தேர்வு, க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் தேவைப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசிகளிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்படும் என மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.