புதிதாக உருவெடுத்துள்ள எச்5என்1..!! அச்சத்தில் மக்கள்..!! பறவைகளுக்கும் பாதிப்பா..?
பறவைக் காய்ச்சல் தொற்று நோய் கொரோனா தொற்று நோயை விட 100 மடங்கு ஆபத்தானது என மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவியது இதனால் பல்லாயிரம் கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. மட்டுமின்றி பலர் உயிர் இழந்தனர். அதன் பின் அதற்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு அதன் வீரியத்தை குறைக்க தொடங்கினார்கள். அதன் பயத்தில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்கே மூன்று ஆண்டுகள் ஆனது. அதற்குள் தற்போது பீதியை கிளப்பும் விதமாக மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸின் உருமாறிய எச்5என்1 ( H5N1 ) படிமங்கள் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா நுண்ணுயிரியைக் காட்டிலும் 100 மடங்கு மிக மோசமான பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், அது பாதித்தால், பாதிக்கும் மேற்பட்டோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தீவிர நிலைகளை நெருங்கி வருவதால் உலங்கெங்கும் தொற்று நோய் அபாயம் ஏற்படும், சாத்தியம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பறவைக் காய்ச்சல் வைரஸால் மொத்தம் 462 இறப்புகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அமெரிக்காவின் 6 மாநிலங்களில் அதன் தொற்றுகள் கண்டறியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் மூலம் ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டதை போல இந்த காய்ச்சலிலும் வாழ்வாதாரம் பாதிக்கபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..