ரஜினி குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!!
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி.., தற்போது பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
மற்ற தம்பதியர்களை போல வாழ்ந்துவந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அந்த நிலையிலும் அவர்கள் சினிமாவில் பயணித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை தொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில் அவர்கள் இருவரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகும் படி தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் விவகாரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் இரண்டு மகன்கள் யாருடைய அரவணைப்பில் வளர்க்கப்படுவார்கள் என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.
இதற்கு முன் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா அசுவின் திருமணமும் விவகாரத்தில் முடிந்து பல ஆண்டுகள் கழித்து தற்போது தொழில் அதிபர் மகனுடன் மறு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் பூகம்பம் வெடித்ததை போல உள்ளது என சில உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..