இரட்டை இலை சின்னம் யாருக்கு..? தேர்தல் ஆணையத்தின் முடிவு இது தான்..!!
கடந்த 2014ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை அடைந்ததை தொடர்ந்து 2016-ல் ஜெயலலிதா மரணடைந்த போது ஓ.பன்னீர்செல்வமே முதலமைச்சர் ஆனார். பின் எடப்பாடியுடன் இணைந்து துணை முதல்வர் ஆனார். துணை முதல்வரான பின் தனது செல்வாக்கை பயன்டுத்தி டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவை மீது எதிர்ப்பை தெரிவித்தார். அதன் பின் அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மோதல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பின் பிரதமர் மோடியுடன் பிணைப்பில் இருந்த அவர் தோல்வியடைந்தார். இதனால் ஓபிஎஸ் எடப்பாடியிடையே சண்டை ஏற்பட்டு அவரவர் தரப்பில் குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.
அதிமுக பழனிசாமியிடம் முழு பொறுப்பும் வந்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவை விட்டு வெளியேறினர். அதன்பின் டிடிவியுடன் ஓபிஎஸ் இணைந்து சசிகலாவுடன் இணையும் முயற்சியில் தோல்வி அடைந்து அதன்பின் பாஜகவின் ஆதரவாளராக மாறினார். இங்காவது இவரை மதிப்பார்களா என்ற நிலைக்கும் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
அதில் ஆத்திரமடைந்த ஓபிஎஸ், எடப்பாடியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதி சின்னத்தை ஓபிஎஸ் உபயோகிக்க தடை விதிக்கஉத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் குழு பயன்படுத்தக்கூடாது அதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என இடைக்கால தடை விதித்தார்.
எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் :
இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்தார்.
மனுவில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் தான் கையொப்பம் இடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் மாற்று ஏற்பாடாக இரு பிரிவினருக்கும் சுயேச்சை சின்னங்களை ஒதுக்கலாம் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான புகழேந்தி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வி அடைவதை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்த மனுவை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..