பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்..!! உங்களுக்கு லீடு வேணும்னா நான் சொல்லுறன்..!! கடுப்பான அமைச்சர் உதயநிதி..!!
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒரு போதும் சொல்லவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் முன் பேசியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்ப்பதை விட சிறந்தது அதை ஒரே அடியாக ஒழிப்பது, அது மட்டுமே எங்களின் நோக்கம்.
Udhayanidhi Stalin, son of Tamilnadu CM MK Stalin, and a minister in the DMK Govt, has linked Sanatana Dharma to malaria and dengue… He is of the opinion that it must be eradicated and not merely opposed. In short, he is calling for genocide of 80% population of Bharat, who… pic.twitter.com/4G8TmdheFo
— Amit Malviya (@amitmalviya) September 2, 2023
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் இந்தியாவில் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருப்பதாக பாஜக தகவல் தொழில்நுட்ப தலைவர் “அமித் மால்வியா” தனது ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல ஒரு சாரார் கண்டனம் எழுப்பிய நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
I never called for the genocide of people who are following Sanatan Dharma. Sanatan Dharma is a principle that divides people in the name of caste and religion. Uprooting Sanatan Dharma is upholding humanity and human equality.
I stand firmly by every word I have spoken. I spoke… https://t.co/Q31uVNdZVb
— Udhay (@Udhaystalin) September 2, 2023
அதனை குறிப்பிட்டு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்போராட்டத்தை சந்திக்கத் தயார் என்றார். மேலும், திராவிட நிலத்தில் இருந்து சனாதனத்தை ஒழிக்கும் நோக்கம் சிறிதும் குறையாது என்று உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டார்.
Discussion about this post