வெயில் காலத்தில் இதை பண்ண மறக்காதீங்க..!! அப்புறம் உங்க வீட்டுலையும்..!!
தற்போது கோடை வெயில் நம்மை வாட்டி வதைக்கிறது.., நம்மை மட்டுமா வாயில்லா ஜீவ ராசிகளையும் தான்.., குறிப்பாக இந்த காலத்தில் பாம்புகள் தன் வாழ்விடத்தை மாற்றிக்கொள்ளும் காலம்.., கிராமப்புறங்களில் இருப்பவர்களின் வீட்டில் பாம்புகள் குடியேறவும் வாய்ப்புகள் இருக்கிறது.. அதனை தவிர்க்க சில வலிகளை பார்க்கலாம்..
1. காற்று வருவதற்காக நீங்கள் நீண்ட நேரம் திருந்து வைக்கும் ஜன்னல்களை மூடி வைக்கலாம். அல்லது ஜன்னல்கள் மீது வலை வைத்து திறந்து வைக்கலாம் இதனால் காற்றும் வரும் பாம்பும் வராது. ஏன் என்றால் நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் அதிக உயரத்தை எட்டும்.
2. குறிப்பாக மாலை வேளையில் வீட்டின், கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கலாம். ஏன் என்றால் ஊர்வன வகை பாம்பு முற்றிலும் அமைதியாகவே நடமாடும்.., அதனால் அதன் ஓசையும் நமக்கு கேட்காது. இதனால் இந்த வகை பாம்புகள் எப்படி வேண்டுமானாலும் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.
3. குளிர்ச்சிக்காகவும் நிழலுக்காகவும் நாம் மரத்தின் கீழ் நிற்கும் போது மரத்தின் கிளைகள் மீது பாம்புகள் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
4. படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. மாலை நேரங்களில் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட தொடங்கும் அந்த சமயத்தில் வீட்டின் வெளியே கயத்து கட்டில் அல்லது பாய் போட்டு நீங்கள் படுத்தால் பாம்பு உங்கள் மீது ஏற வாய்ப்பு உள்ளது..
6. பாம்பு மட்டும் குளிர்ந்த இடத்தை தேடாது பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜீவ ராசிகளுக்கு இரவில் அலையும்..
7. உங்கள் வீட்டின் அருகில் உள்ள புதர்களை சுத்தப்படுத்தி முள் வேலி அமைக்கலாம்.., முக்கியமாக எலி, தவளை போன்றவை புதர்களில் இருக்கின்றதா என பார்த்து கொள்ளுங்கள்.., ஏன் என்றால் அவற்றை சாப்பிடுவதற்காக பாம்புகள் அலையும்..
8. பாம்பு விரட்டு வதற்காக வீட்டை சுற்றி மருந்துகள் தூவி விடலாம். அது வீட்டிற்குள் பாம்புகள் மட்டுமல்ல கொசு, தேள், பூரான் போன்றவை நுழையாமல் பார்த்துக்கொள்ளும்.
உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை கொல்லுவதை விட அவற்றை பிடித்து வனத்துறை அதிகாரிகள் அல்லது பாம்பு பிடிப்பவர்களிடம் தகவல் கொடுங்கள் ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும்.., நீங்கள் அவற்றை கொள்ள முயச்சிக்கும் போது அவை உங்களை தாக்கிவிடும்.
குறிப்பாக இந்த தகவலை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் இந்த ஆபத்தில் இருந்து நிறைய பேர் காப்பாற்ற படுவார்கள்..