ஆடி மாதத்தில் இதை செய்ய மறக்காதீங்க..!
ஆடி மாதம் என்றாலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புக்கள் உண்டு. அப்படி இருக்க ஆடி மாதத்தில் நாம் கட்டாயமாக செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
குறிப்பாக ஆடி அமாவாசையில் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அவை என்னவென்றால் புனித நீராடல், தானம், தர்ப்பணம் போன்ற மூன்று செயல்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் இருக்கிறது. இதனால் உங்களின் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ்வதற்கு இந்த புனித நீராடல், தானம், தர்ப்பணம் உதவுகிறது. இந்த தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.
அந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் இருக்கிறது.
தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் ஆயிரம் விஷயங்கள் நிறைந்து இருக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தம் அமாவாசை நாளில் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். எனவே நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம்.
இந்த தீர்த்தத்தை வைத்து குளக் கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது இன்னும் சிறந்த பலனை கொடுக்கும்.
– லோகேஸ்வரி.வெ