”குடிக்காதிங்க அம்மா, அப்பா” அறிவுரை வழங்கிய மகனுக்கு ஸ்கெட்ச் போட்ட பெற்றோர்கள்”.. போதை தம்பதியினரின் கொடூரம்..!
தெலுங்கானாவை வசித்து வரும் தம்பதியினருக்கு அசோக், சேகர் என இரண்டு மகன்கள் உள்ளன. தம்பதியினர் இருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இந்தநிலையில் கணவன் மனைவி இருவரும் தினமும் மது அருந்திவிட்டு தனது மகன்களுடன் சண்டை போட்டு வந்துள்ளனர்.
இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத மூத்த மகன் அசோக் இருவரையும் அடித்து குடிக்காமல் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தனது மூத்த மகனை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி வழக்கம் போல் அதிக மது அருந்தி வந்த இருவரும் வீட்டில் போர்வை போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்த இரண்டாவது மகன் சேகரை மூத்த மகன் என நினைத்து கத்தியால் பலமாக குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சேகரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சேகரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சேகர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
பின்னர், தகவறிந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்து கோர்டில் அஜர்படுத்தி சிறையில் சிறையில் அடைத்தனர்.
மது அருந்த வேண்டாம் என்றி அறிவுரை வழங்கிய மூத்த மகனை கொலை செய்ய முடிவு செய்து இரண்டாவது மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுடியி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்