பனை நுங்கு இவ்வளவு நன்மை தருமா..! – தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை தொடங்கிவிட்டால் வெயில் மட்டும் தான் ஆட்டம் போடுமா..? எங்க ஆட்டம் அதை விட வேற மாதிரி என்று கோடை தொடங்கியதும் வருபவர்கள் தான். மாம்பழம், தர்பூசணி, பலாப்பழம், பனை நுங்கு.
கோடை வெயிலை சாமளிக்க பனை நுங்கும் மிக உதவியாக இருக்கிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிற்றில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
வெயிலின் வறட்சியில் சிலர், குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வார்கள். அதில் அசிட்டிக் பவர் இருப்பதால். வயிற்றுக்கு குளிர்ச்சி கொடுத்தாலும். நாளடைவில் அதுவே அல்சராக மாறிவிடும்.
அதற்கு தீர்வாக தான் சில இயற்கை குளிர் உணவுகள் இருக்கின்றன. பனை நுங்கை வயிற்றுக்கு குளிர்ச்சி தருவது மட்டுமின்றி. நுங்கின் தோலை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, சருமத்தை என்றும் அழகாக வைத்திருக்கும்.
மேலும் இதில் சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடல் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளும்.