சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனநாயகத்தை காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு தேவை, நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமில்லை, ஜனநாயகத்தை காப்பதற்காக மட்டுமே தொடர வேண்டும் எனத் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நல்ல நண்பராக உள்ளார். டெல்லிக்கு நெருக்கடி தரக்கூடிய ஆட்சியாக பிஜேபி உள்ளது. பல்வேறு நெருக்கடியில் தொடர்ந்து வழங்கிக் கொண்டுள்ளது. டெல்லி மாநில துணை ஆளுநர் மூலமும் பல்வேறு தொல்லைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
பணியாளர்கள் தொடர்பாக ஐந்து உச்ச நீதிமன்றம் கொண்ட நீதிபதிகள் டெல்லி மாநிலத்துக்கு சாதகமாக தீர்ப்பை மிக அழகாக வழங்கி இருக்கிறது. ஆனால் அது நிறைவேறக்கூடாது என்று பிஜேபி ஆட்சி அதை எதிர்த்து ஒன்றிய அரசு இன்று ஒரு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.
இதனை எதிர்த்து திராவிட மடல் அரசு என்றும் இருக்கும், இதில், மற்ற கட்சியினர் எப்படி ஆதரிக்க வைப்பது குறித்து பேசினோம்.
அகில இந்திய அளவில் இருக்கும் கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். வரும் 12ஆம் நிதீஷ் குமார் எதிர்க்கட்சிக்கு ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாகவும் அதன் தேதியினை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனநாயகத்தை காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு தேவை, நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமில்லை, ஜனநாயகத்தை காப்பதற்காக தொடர வேண்டும் என தெரிவித்தார்.
Discussion about this post