திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்…!! வேதனையில் திமுக..!!
நேற்று இரவு விழுப்புரம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் விக்கிரவாண்டி சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அதற்காக நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி வருகை தந்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது உடன் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் அவரை மீட்டு காத்திருப்போர் அறைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்தனர்.
அதனையடுத்து எம்எல்ஏ லட்சுமணன் மற்றும் அவரது மகன் செல்வகுமார் தகவல் அறிந்து வந்தனர். பின்னர் புகழேந்தியை அழைத்து சென்று முதலமைச்சருக்கான காத்திருப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்து பின் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு நேற்று இரவு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த இரங்கல் செய்தி அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி திமுகவினரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் :
இவரின் இரங்கல் செய்தியை கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவில் அவர் இணைந்த நாளில் இருந்தே கட்சிக்காக நிறைய தியாகங்களை செய்து.., பாடுபட்டவர் நேற்று இரவு கூட பிரச்சாரத்திற்கு வருகிறேன் என சொன்னார்..,
ஆனால் நான் சொன்னேன் முதலில் உடல் முக்கியம் பின்னரே கட்சி என சொன்னேன், ஆனால் அவர் கட்சிக்காக பாடுபடுவேன் என சொன்னார்.., இவரின் இறப்பு எங்கள் குடும்பத்திற்கு பெரும் இழப்பு என தெரிவித்துள்ளார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..