திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும்…
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தியின் இல்லதிருமண விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இந்த அளவிற்கு மழை வரும் என எச்சரிக்கவில்லை என தெரிவித்தார்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக என தெரிவித்தார்.
2015-ல் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்து இருப்பார்கள் என தெரிவித்த அவர், 2015 விட தற்போது அதிக மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு என தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் யார், எங்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் 6 ஆயிரம் நிவாரணம் உறுதியாக வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 45 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், 45 மீனவர்கள், 138 மீன்பிடிப் படகுகளை உடனே விடுவிக்க தூதரக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)