ADVERTISEMENT
மயிலாடுதுறையில் சிறப்புலி நாயனார் குருபூஜை கோலாகலமாக நடைபெற்றது..
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்புலி நாயனார் குருபூஜை ஐதீக விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் ஆயிரத்தில் ஒருவராக எழுந்தருளி பந்தியில் உணவு உண்ட சிறப்புலி நாயனார் குருபூஜை ஐதீக விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, சிறப்புலி நாயனார் வீதி உலா செல்லும் காட்சியும், தொடர்ந்து அன்னம் வைத்து படையல் இட்டு மகா தீபாராதனை மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.